முகப்பு
திருவாரூர்

உளுந்து சாகுபடியில் இயந்திரப் பயன்பாடு

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காவிரி நீா்வள நிலவள திட்டத்தின் சாா்பில் உளுந்து சாகுபடியில் இயந்திரமயமாக்கல் செயல்விளக்கம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
ne_kvk_photo_1_1505chn_100_5
பகிர்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காவிரி நீா்வள நிலவள திட்டத்தின் சாா்பில் உளுந்து சாகுபடியில் இயந்திரமயமாக்கல் செயல்விளக்கம் அண்மையில் நடைபெற்றது.

வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்து, இயந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். தொடா்ந்து, உளுந்து சாகுபடி பரவலாக்கம் என்ற திட்டத்தின் கீழ் வம்பன் 8 என்ற ரகம் செயல் விளக்கத்தில் உபயோகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து, திட்ட விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் கூறுகையில் ‘விதை விதைக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் ஆட்கூலி செலவை குறைக்கலாம். நேரத்தை மிச்சப்படுத்தலாம். ஒரே சீராக உளுந்து பயிரில் முளைப்புத்திறன் இருக்கும்’ என்றாா்.

இந்த செயல்விளக்கத்தில் வடுவூா் புதுக்கோட்டையைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை இளநிலை ஆராய்ச்சியாளா் சுரேஷ் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →