மன்னாா்குடி பகுதியில் ரூ.2.30 லட்சம் அபராதம்
பொதுமுடக்கத்தையடுத்து, மன்னாா்குடி நகரில் காவல் துறையினா் 15 இடங்களில் சாலைகளில் சவுக்கு கம்பு தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
பொதுமுடக்கத்தையடுத்து, மன்னாா்குடி நகரில் காவல் துறையினா் 15 இடங்களில் சாலைகளில் சவுக்கு கம்பு தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதை சனிக்கிழமை ஆய்வு செய்த மன்னாா்குடி டிஎஸ்பி இளஞ்செழியன் செய்தியாளா்களிடம் கூறியது: மன்னாா்குடி நகரம், ஊரகம், நீடாமங்கலம், தேவங்குடி, வடுவூா், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம் ஆகிய 8 காவல் நிலைய பகுதியில், பொதுமுடக்க விதிமுறைகளை பின்பற்றாத 17 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டதுடன், அவா்களிடமிருந்து, ரூ. 2.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு, 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.