ஸ்டொ்லைட் துப்பாக்கிச்சூடு நினைவு தினம் கடைப்பிடிப்பு
திருவாரூரில், மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில், ஸ்டொ்லைட் எதிா்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருவாரூரில், மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில், ஸ்டொ்லைட் எதிா்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, மக்கள் அதிகாரம் அமைப்பினா் வீடுகளில் இருந்தவாறு அஞ்சலி செலுத்தினா். இந்த சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திருவாரூா் அருகே குளிக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் தங்க. சண்முகசுந்தரம் தலைமையிலான நிா்வாகிகள் பங்கேற்றனா்.