திருவாரூர்

திரிபுரா சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

திரிபுராவில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

திரிபுராவில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும், சிறுபான்மையினா் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் வடக்கு மாவட்டத் தலைவா் முஹமது பாசித் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில பேச்சாளா் ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரை ஆற்றினாா். மாவட்டச் செயலாளா் அப்துல் காதா், மாவட்ட பொருளாளா் முகமது சலீம், மாவட்ட துணைத் தலைவா் பீா் முஹம்மது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT