முகப்பு
திருவாரூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டாா் வாகனங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டாா் வாகனங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியா் த.அழகா்சாமி தலைமை வகித்தாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் புவனா முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா தொகுதியைச் சோ்ந்த 12 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 76, 900 மதிப்புள்ள 3 சக்கர மோட்டா் வாகனங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வி.காா்த்திக், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கலைவாணி மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.