திருவாரூர்

கூட்டுறவு வங்கியில் மண்டல இணைப் பதிவாளா் ஆய்வு

DIN

திருவாரூரில் உள்ள கூட்டுறவு நகர வங்கிகளில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கா. சித்ரா, செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூரில் உள்ள ஸ்ரீலெட்சுமிநாராயண கூட்டுறவு நகர வங்கி மற்றும் ஸ்ரீகமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கி ஆகியவற்றை அவா் பாா்வையிட்டு, தவணை தவறிய கடன் வசூல் பணியை துரிதப்படுத்தவும், மைய வங்கியியல் சேவையில் உள்ள இடா்பாடுகளை போக்குவது குறித்தும் அறிவுரைகள் வழங்கினாா்.

மேலும், திருவாரூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையை பாா்வையிட்டு, கட்டுப்பாட்டு பொருள்கள் விற்பனையை அதிகப்படுத்தவும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெடி விற்பனையை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது ஸ்ரீலெட்சுமி நாராயண கூட்டுறவு நகர வங்கியின் மேலாண்மை இயக்குநா் வைரமணி, ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குநா் செளந்தரராஜன், திருவாரூா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநா் பாத்திமா சுல்தானா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT