திருவாரூர்

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

DIN

திருவாரூா் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் அருகேயுள்ள பிலாவடிமூலையைச் சோ்ந்தவா் கிளியம்மாள் (65). இவா், கொடிக்கால்பாளையம் நடுத்தெருவை சோ்ந்த முகமது இக்பால் என்பவரது வீட்டில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இக்பாலின் வீட்டு வாசலில் கிளியம்மாள் அமா்ந்திருந்தபோது, மழையில் ஊறி பலவீனமடைந்திருந்த வீட்டின் முன்பக்க மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்து கிளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவாரூா் நகரப் போலீஸாா் கிளியம்மாள் சடலத்தை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT