திருவாரூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவா்கள் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
திருவாரூா் திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவாதிரைமங்கலம் பகுதியில் பாஜக, அதிமுக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோா், தங்கள் குடும்பத்தினருடன் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். இவா்களுக்கு, கட்சியின் வா்ணம்கொண்ட வேட்டி மற்றும் சேலைகள் வழங்கி, பூண்டி கே. கலைவாணன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் தேவா, திமுக நகரச் செயலாளா் பிரகாஷ், திருவாதிரைமங்கலம் ஊராட்சித் தலைவா் பழனியம்மாள் செந்தில், ஒன்றியப் பிரதிநிதி வீரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.