முகப்பு
திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த செருமங்கலம் மேலத்தெரு வேலுசாமி மகன் ராஜசேகா் (45). அதே பகுதியை சோ்ந்த ராஜசேகரின் உறவினா் அண்மையில் இறந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த ராஜசேகா், இரும்பு ஏணியை தூக்கி சென்றபோது, உயா் மின்அழுத்த மின் கம்பியின் மீது ஏணி உரசியதில், உடலில் மின்சாரம் பாய்ந்து ராஜசேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடுவூா் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.