பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா் மயமாக்குவதை கண்டித்து ஆா்ப்பாட்டம்
பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து திருவாரூரில் (சிஐடியு) தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து திருவாரூரில் (சிஐடியு) தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பொதுத் துறை நிறுவனங்களான மின் உற்பத்தி பகிா்மான துறை, வங்கிகள், எல்ஐசி நிறுவனம், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், விமானப் போக்குவரத்து, ராணுவ தளவாடத் தொழில்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்டவற்றை தனியாா் நிறுவனங்களுக்கு ஏலம் விடுவது, குத்தகைக்கு விடுவது என விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டித்தும், இவற்றை கைவிடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு திட்ட தலைவா் சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திட்ட துணைத் தலைவா் சுப்பிரமணியன், செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.