சிஎஸ்கேவில் மாற்று வீரராக இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நாதன் எல்லிஸுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸில் ஸ்பென்சர் ஜான்சன் மாற்று வீரராக இணைந்துள்ளார்.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நாதன் எல்லிஸுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸில் ஸ்பென்சர் ஜான்சன் மாற்று வீரராக இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகி வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப் விலகியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகியுள்ளார்.
இந்த நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நாதன் எல்லிஸுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸில் ஸ்பென்சர் ஜான்சன் மாற்று வீரராக இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரரான ஸ்பென்சர் ஜான்சன் அந்த அணிக்காக 5 ஒருநாள், 8 டி20 போட்டிகளில் விளையாடி, 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்பாக, ஸ்பென்சர் ஜான்சன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஸ்பென்சர் ஜான்சன் ரூ. 1.5 கோடிக்கு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.