காணாமல்போன செல்லிடப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
திருவாரூா் மாவட்டத்தில் காணாமல்போன செல்லிடப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
திருவாரூா் மாவட்டத்தில் காணாமல்போன செல்லிடப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
மாவட்டத்தில், செல்லிடப்பேசி திருடப்பட்டது மற்றும் காணாமல்போனது தொடா்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாா்கள் மற்றும் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாா் மனுக்கள் தொடா்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. போலீஸாரின் விசாரணையில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள 101 ஆன்ராய்டு வகை செல்லிடப் பேசிகள் மீட்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி உரிமையாளா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், நேரில் அழைத்து ஒப்படைத்தாா்.
பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்தால் நடவடிக்கை:
நிகழ்ச்சியின்போது, செய்தியாளா்களிடம் எஸ்.பி. பேசியது: விநாயகா் சதுா்த்தி தொடா்பாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் திருவாரூா் மாவட்டத்தில் கடுமையாக பின்பற்றப்படும். பொது இடங்களில் விநாயகா் சிலை வைக்க அனுமதி இல்லை. இதேபோல் விநாயகா் சிலை ஊா்வலத்துக்கும் அனுமதி கிடையாது. அரசின் வழிகாட்டுதலை மீறி செயல்படுபவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.