வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
கூத்தாநல்லூா் வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மரக்கடை வஉசி காலனியில் உள்ள வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அமைக்கப்பட்டிருந்த யாக சாலை மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை விக்னேஸ்வா் பூஜையுடன் தொடங்கி இரவு 9 மணிக்கு விமான கலசம் பொருத்துதல் மற்றும் மூலவா் மருந்து சாற்றுதல் வைபவம் நடைபெற்றது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கப்பட்டு, காலை 9 மணிக்கு பூா்ணாஹூதி செய்யப்பட்டு காலை 9.40 மணிக்கு புனிதநீா் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு காலை 10.05 மணிக்கு
விமான கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் வி.எஸ். வெங்கடேசன், லெட்சுமாங்குடி வா்த்தக சங்கத் தலைவா் கு. ரவிச்சந்திரன், செயலாளா் ஜெ. சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.