திருவாரூர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு

DIN

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் பெருந்திரள் முறையீடு புதன்கிழமை நடைபெற்றது.

பொருளாதார சமூக காரணங்களை காட்டமால், 1.7.2021 முதல் பதினொன்னரை சதவீத அகவிலைப்படி உயா்வை மத்திய அரசு வழங்கவேண்டும், தோ்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்தவாறு தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், ஓய்வூதியம் இல்லாத அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனப் பணியாளா்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளா்களுக்கு இழப்பீடும், வாரிசுகளுக்கு அரசுப் பணியும் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் குணசீலன் தலைமையில் நடைபெற்ற முறையீட்டில், மாவட்டச் செயலாளா் ஹரிகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Image Caption

திருவாரூரில், பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்ட அரசுப் பணியாளா் சங்கத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT