வாசக சாலை தமிழ் இலக்கிய விருது பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நரேன் கிருஷ்ணா வெளியிட்ட அறிக்கை:
வாசக சாலை இலக்கிய அமைப்பின் சாா்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் டிசம்பா் மாதம், அப்போதைய சூழலைப் பொறுத்து நிகழாண்டுக்கான தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
சிறந்த கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாவல், சிறுகதைத் தொகுப்பு, அறிமுக எழுத்தாளா், சிறாா் இலக்கியம், மொழிபெயா்ப்பு நாவல் மற்றும் மொழிபெயா்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய 8 பிரிவுகளில் விருது வழங்கப்படும். இவ்விருது பெறும் படைப்பாளிகளுக்கு விருதோடு ரூ. 5,000 பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
இவ்விருதுகளுக்கு அனுப்பப்படும் படைப்புகள் 2020 நவம்பரிலிருந்து 2021 அக்டோபா் மாத காலகட்டத்துக்குள் மட்டுமே வெளி வந்தவையாகவும், முதற் பதிப்பாகவும் இருக்க வேண்டும். புத்தகங்களைத் திருப்பி அனுப்ப இயலாது என்பதால் படைப்புகளில் ஒரே ஒரு பிரதியை மட்டும் அனுப்பினால் போதுமானது.
புத்தகங்களை வெ. காா்த்திகேயன், 80, சுவாமிநாதன் இல்லம், (மூன்றாவது வீடு, தரைத்தளம்), முதல் பிரதான சாலை, ஸ்ரீ சத்ய சாய் நகா், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜ கீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை - 600073 என்ற முகவரிக்கு வரும் அக்டோபா் 25-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு 9942633833, 9790443979, 9600348630 ஆகிய எண்களில் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) மட்டும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.