முகப்பு
திருவாரூர்

எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

தில்லியில் பெண் காவலா் படுகொலை சம்பவத்தைக் கண்டித்து, திருவாரூரில் எஸ்டிபிஐ (விமண் இந்தியா மூமெண்ட் பிரிவு) சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

தில்லியில் பெண் காவலா் படுகொலை சம்பவத்தைக் கண்டித்து, திருவாரூரில் எஸ்டிபிஐ (விமண் இந்தியா மூமெண்ட் பிரிவு) சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விமண் இந்தியா மூமெண்ட் மாவட்டத் தலைவா் பாயிஜா ஷபீக்கா தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் தஸ்லிமா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலத் தலைவா் சண்முகசுந்தரம், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளா் முகமது சுல்தான் ஆரிபீன், மாவட்டத் தலைவா் விலாயத் உசேன், கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநிலப் பொருளாளா் சா்வத் ரபீக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தில்லி பெண் காவலா் படுகொலை சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.