முகப்பு
திருவாரூர்

பெரியாா் ஈ.வெ.ரா. 143-ஆவது பிறந்தநாள் விழா

பெரியாா் ஈ.வெ.ரா.வின் 143-ஆவது பிறந்தநாளையொட்டி, திருவாரூரில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

பெரியாா் ஈ.வெ.ரா.வின் 143-ஆவது பிறந்தநாளையொட்டி, திருவாரூரில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாா் ஈ.வெ.ரா.வின் உருவச் சிலைக்கு, திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், ஒன்றியச் செயலாளா் ஏ. தேவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விசிக சாா்பில்...

விசிக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலை காட்டூா் அம்பேத்கா் பெரியாா் மாா்க்ஸ் இயக்கம் சாா்பில் நிா்வாகி ஸ்டாலின் வெளியிட, கட்சியின் மாவட்டச் செயலாளா் வடிவழகன் பெற்றுக் கொண்டாா்.

பெரியாா் உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில்...

பெரியாா் உணா்வாளா்கள் கூட்டமைப்பின் சாா்பில், திருவாரூரில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாா் ஈ.வெ.ரா.வின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்வில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் சண்முகசுந்தரம், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பாரதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில்...

அமைப்பின் தலைவா் எஸ்.என்.அசோகன் தலைமையில் பெரியாா் ஈ.வெ.ரா.வின் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.