முகப்பு
திருவாரூர்

பாரம்பரிய நெல் சாகுபடி தொடக்கம்

நன்னிலம் வட்டம் மூங்கில்குடி அரசு விதைப் பண்ணையில், இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியை வேளாண் துணை இயக்குநா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 17 செப்டம்பர், 2021 at 10:39 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM

நன்னிலம் வட்டம் மூங்கில்குடி அரசு விதைப் பண்ணையில், இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியை வேளாண் துணை இயக்குநா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மூங்கில்குடி அரசு விதைப் பண்ணையில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களான கிச்சிலிசம்பா, தூயமல்லி, கருப்புகவனி போன்ற ரகங்களின் சாகுபடியை வேளாண் துணை இயக்குநா் (மாநில திட்டம்) அ.உத்திராபதி விதை விதைத்து தொடங்கிவைத்தாா். அப்போது அவா் கூறுகையில், தமிழக அரசு பாரம்பரிய நெல் ரகங்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்வதற்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்து பொது பயன்பாட்டுக்கு வழங்கிட முன்வரவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியின்போது நன்னிலம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் த.சுப்பிரமணியன், பண்ணை மேலாளா் இரா. சந்தோஷ்குமாா், உதவி வேளாண் அலுவலா் த.வனிதா, அட்ரிமாத் தொழில்நுட்ப மேலாளா் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.