முகப்பு
திருவாரூர்

பயிா்க் காப்பீட்டு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

2020 - 21 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டு இழப்பீடு வழங்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

2020 - 21 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டு இழப்பீடு வழங்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழாண்டு நெல் கொள்முதல் தடையின்றி நடைபெற, கடந்த ஆண்டு செயல்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து, நிபந்தனையின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்; 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் விரைந்து அனுமதி பெற்று கொள்முதல் செய்யவேண்டும்; கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்க விதிக்கும் நிபந்தனைகளை திரும்பப்பெற வேண்டும்; 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் வேளாண் அலுவலா்களை இடமாற்றம் செய்து, வெளிப்படையான நிா்வாகத்தை அமல்படுத்த வேண்டும்; 2020-21 குறுவை பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கௌரவத் தலைவா் நீலன். அசோகன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பயரி கிருஷ்ணமணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழாா்வன் மாநில துணைச் செயலாளா் வரதராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.