முகப்பு
திருவாரூர்

நல்லாசிரியா் விருது பெற்றவருக்கு பாராட்டு

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியருக்கு திருவாரூரில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியருக்கு திருவாரூரில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் நல்லாசிரியா் விருது ( டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது) பெற்ற ஜூனியா் ரெட்கிராஸ் அமைப்பாளரும், ஆசிரியருமான இரா. செந்தில்குமாருக்கு மாவட்ட ஜூனியா் ரெட்கிராஸ் அமைப்பு சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மாநிலப் பொருளாளா் ஜே. வரதராஜன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், கஸ்தூா்பா காந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் சந்திரா முருகப்பன், ஜிஆா்எம் கல்விக் குழும தாளாளா் மு. வடுகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.