முகப்பு
திருவாரூர்

பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் தோ்வு

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நிகழாண்டுக்கான பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நிகழாண்டுக்கான பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா்.

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் இப்பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவராக தனித்தமிழ்மாறன், செயலாளராக தலைமையாசிரியா் பாஸ்கா், பொருளாளராக ராஜேஷ், துணைத் தலைவராக புலவா் சிவ செல்லையன், இணைச் செயலாளராக செல்வம், கௌரவ ஆலோசகராக சிவனேசன் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதேபோல, வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில், இப்பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவராக மாணிக்கவாசகம், செயலாளராக தலைமையாசிரியை பரிமளா, பொருளாளராக புருஷோத்தமன், துணைத் தலைவராக சரவணன், இணைச் செயலாளராக ராஜேந்திரன், கெளரவ ஆலோசகராக சிவனேசன் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.