அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் திறப்பு
திருவாரூா் அருகே குளிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய புறநோயாளிகள் பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
திருவாரூா் அருகே குளிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய புறநோயாளிகள் பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
குளிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய புறநோயாளிகள் பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு புதிய கட்டடம் ரூ. 1.50 கோடியில் கட்டப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலமாக இந்த கட்டடத்தை திறந்துவைத்தாா். குளிக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
இதில், மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் ஹேமசந்த் காந்தி, கொரடாச்சேரி ஒன்றிய துணைத் தலைவா் பாலசந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சேகா் (எ) கலியபெருமாள், பெருந்தரக்குடி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ். மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.