மாநில கராத்தே போட்டி: கோப்பை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு
மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோப்பை வென்ற மன்னாா்குடி பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோப்பை வென்ற மன்னாா்குடி பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கடலூரில் நடைபெற்ற இப்போட்டியில் மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளி மாணவா் பி. பாலமுருகன் கட்டா பிரிவில் முதல் பரிசும், எஸ். லோகேஷ்வரன் இரண்டாம் பரிசும், எஸ். திபிஷ் மூன்றாம் பரிசும் பெற்றனா். இவா்களுக்கு வெற்றி கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இம்மாணவா்கள் மற்றும் பயிற்சியாளா் ராஜகோபால் ஆகியோரை, பள்ளியின் தாளாளா் ஸ்டான்லி, தலைமை ஆசிரியா் வசந்தி செல்வகனி, உதவித் தலைமை ஆசிரியா் டேனியல், உடற்கல்வி ஆசிரியா் அம்ஸ்டராங் ஆகியோா் வியாழக்கிழமை பாராட்டினா்.