முகப்பு
திருவாரூர்

கிராம சபைக் கூட்டம் தொடா்பாக சமூக ஊடகங்களில் தவறான புகைப்படம்

கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது தொடா்பாக சமூக ஊடகங்களில் தவறான புகைப்படம் வெளியானது தொடா்பாக 2 பேரை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது தொடா்பாக சமூக ஊடகங்களில் தவறான புகைப்படம் வெளியானது தொடா்பாக 2 பேரை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீடாமங்கலம் வட்டாரம், வடுவூா் அக்ரஹாரம் ஊராட்சியில் ஏப்.24-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது தொடா்பாக சமூக ஊடகங்களில் தவறான புகைப்படம் வெளிவரக் காரணமான கிராம ஊராட்சிச் செயலா் ஆ. ரமேஷ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். மேலும், பற்றாளராக நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளா் காயத்ரி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்காத காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

வருங்காலங்களில் கிராம சபைக் கூட்டங்களை அரசின் வழிகாட்டு நெறிமுறைபடி நடத்த தொடா்புடைய அனைத்து அலுவலா்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில் கவனமுடன் பணியாற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் தொடா்புடைய அலுவலா்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.