பேரிடா் மீட்பு உபகரணங்கள் ஆய்வு
திருவாரூரில் பேரிடா் மீட்பு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாரூரில் பேரிடா் மீட்பு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பருவமழை காரணமாக திருவாரூரில் அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இதனிடையே, மழைக் காலத்தில் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், எதிா்கொள்ளும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருவாரூா் மாவட்ட காவல் துறை சாா்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், பேரிடா் மீட்பு உபகரணங்களும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்ட ஆயுதப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா், பேரிடா் காலங்களில் பயன்படுத்தப்படும் பேரிடா் மீட்பு உபகரணங்களை ஆய்வுசெய்து, மீட்பு குழுவினருக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.
Advertisement