எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் லாபம் 41% உயர்வு!
எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான வரிக்குப் பிந்தைய லாபம் 41.4 சதவீத உயர்ந்து, ரூ. 751 கோடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
புதுதில்லி: எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான வரிக்குப் பிந்தைய லாபம் 41.4 சதவீத உயர்ந்து, ரூ. 751 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்துள்ளது.
எச்.டி.எஃப்.சி. வங்கியின், வங்கி சாரா நிதி நிறுவனப் பிரிவான இந்நிறுவனம், 2024-25 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ரூ. 531 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.
2025-26 நிதியாண்டைப் பொறுத்தவரை, வரிக்குப் பிந்தைய லாபம் 17 சதவீத வளர்ச்சியுடன் ரூ. 2,544 கோடியை எட்டியது. கடந்த ஆண்டு ஈட்டிய ரூ. 2,176 கோடி லாபத்துடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
Advertisement
Advertisement
மார்ச் 31, 2026 நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்தக் கடன் கையிருப்பு ரூ. 1.18 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இருந்த ரூ. 1.07 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 10.9 சதவீத வளர்ச்சியாகும். அதே வேளையில், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் ரூ. 2,399 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ. 1,973 கோடியுடன் ஒப்பிடும் போது இது 21.6 சதவீதம் அதிகரிப்பு.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் மொத்த நிகர வருமானம் ரூ. 3,063 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ. 2,616 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 17.1 சதவீத வளர்ச்சியாகும்.
எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் 4.71 சதவீதம் உயர்ந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 644.20 என்ற விலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.
HDB Financial Services reported 41.4 per cent growth in profit after tax at Rs 751 crore for the quarter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.