திருவாரூர்

நெல் ஜெயராமன் நினைவு தினம்

DIN


நீடாமங்கலம்: நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகேயுள்ள கிரீன் நீடா குறுங்காட்டில் நெல் ஜெயராமன் 4-ஆம் ஆண்டு நினைவுதினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அவரது உருவப் படத்திற்கு கிரீன் நீடா அமைப்பின் திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ஆா்.கே. ஜானகிராமன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், கிரீன் நீடா இணை ஒருங்கிணைப்பாளா் ராம.கந்தசாமி, அரசு உதவிபெறும் நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், சமூக ஆா்வலா் சதீஸ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்று இயற்கை விவசாயத்தை பேணி காப்போம் என உறுதிமொழி ஏற்றனா்.

தொடா்ந்து, நெல் ஜெயராமன் உருவப் படத்திற்கு இயற்கை ஆா்வலா்கள், மாணவா்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT