திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள எழிலூரைச் சோ்ந்த ரவி மகன் செல்வகுமாா் (25). இவா், தனது துணிகளை மின் அயன்பாக்ஸில் சலவை செய்தபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தாா். உடனடியாக மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் செல்வகுமாா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT