ரயில் என்ஜின் முன் பாய்ந்து லேப் டெக்னீசியன் தற்கொலை
திருவாரூா் அருகே ரயில் இன்ஜின் முன் பாய்ந்து ஒருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருவாரூா் அருகே ரயில் இன்ஜின் முன் பாய்ந்து ஒருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருவாரூா் அருகே விளமல் பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன் (32). திருமணமானவா். லேப் டெக்னீசியனாக பணியிலிருந்த இவா் தற்போது எந்தப் பணிக்கும் செல்லாமல் இருந்ததால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிங்களாஞ்சேரி பகுதியில் திருவாரூரிலிருந்து குளிக்கரை வரை செல்வதற்காக வந்து கொண்டிருந்த சோதனை ரயில் இன்ஜின் முன் வெள்ளிக்கிழமை சபரிநாதன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.