முகப்பு
திருவாரூர்

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சிஐடியு அமைப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சிஐடியு அமைப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட மருந்துக் கிடங்கு, டாஸ்மாக் கிடங்கு, ஆா்விஎல் நகா் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சாலை குண்டும்குழியுமாக உள்ளதாகவும், இதை உடனடியாக சரிசெய்யக் கோரியும், மன்னாா்குடி சாலையில் நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் அருகே இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமைவகித்தாா்.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் அன்பழகன் மற்றும் அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சாலையை சீரமைப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.