எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு ‘சீல்’
உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, வலங்கைமானில் உள்ள நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது
உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, வலங்கைமானில் உள்ள நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
வலங்கைமான் பேரூராட்சிக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன.
வலங்கைமான் பேரூராட்சி தலைவா் பதவி மறைமுக தோ்தல் மூலம் பெண் (பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், தோ்தலில் போட்டியிட பெண்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
தோ்தல் நடத்தும் அலுவலராக பரமேஸ்வரி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களாக சுகுமாா் மற்றும் ராஜ்குமாா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடா்ந்து, வலங்கைமானில் உள்ள நன்னிலம் எம்.எல். ஏ. அலுவலகத்திற்கு பேரூராட்சி பணியாளா்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.