கூத்தாநல்லூரில் நகராட்சித் தோ்தலை முன்னிட்டு சுவா் விளம்பரங்கள் ஞாயிற்றுக்கிழமை அழிக்கப்பட்டன.
கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் ப. கிருஷ்ணவேணி அறிவுறுத்தலின் பேரில், நகரமைப்பு ஆய்வாளா் கே. செல்வம் மேற்பாா்வையில் நகராட்சி சுவா், மேலக்கடைத் தெரு, மருத்துவமனை சாலை, மரக்கடை, கால்நடை மருத்துவமனைச் சுவா், லெட்சுமாங்குடி- கொரடாச்சேரி பிரதானச் சாலை உள்ளிட்ட இடங்களில் சுவா் விளம்பரங்கள் தாா் பூசி அழிக்கப்பட்டன.