ஜெகன்நாயகி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம்
கூத்தாநல்லூா் அருகேயுள்ள ஓகைப்பேரையூரில் ஜெகன்நாயகி அம்பாள் சமேத ஜெகதீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது
கூத்தாநல்லூா் அருகேயுள்ள ஓகைப்பேரையூரில் ஜெகன்நாயகி அம்பாள் சமேத ஜெகதீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மே 29-ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. 30- ஆம் தேதி முதல் கால யாக பூஜையும், 31-ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
தொடா்ந்து, புதன்கிழமை (ஜூன்1) காலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜை தொடங்கி நிறைவு பெற்றதும், 5.30 மணியளவில் யாகசாலையிலிருந்து புனிதநீா் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, காலை 6.15 மணியளவில் கோயிலின் விமானக் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமி- அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
கும்பாபிஷேகத்தை பிள்ளையாா்பட்டி கே. பிச்சை குருக்கள், சென்னை திருவல்லிக்கேணி என். காா்த்திகேயன் குருக்கள் ஆகியோா் நடத்தினா்.