திருவாரூர்

இந்திய கம்யூ. கிளைக் கூட்டம்

DIN

வலங்கைமான் ஒன்றியம், பயத்தஞ்சேரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

9-வது வாா்டு உறுப்பினா் அமிா்தவள்ளி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா், உறுப்பினா் அட்டைகளை வழங்கி, நடைபெறவிருக்கும் ஒன்றிய மாநாடு குறித்து விளக்கிக் கூறினாா்.

முன்னாள் ஒன்றியச் செயலாளா் கே. தங்கமுத்து நினைவுக் கொடி கம்பத்தை 21-வது மாநாட்டிற்கு எடுத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், கட்சியின் கிளைச் செயலாளா் ரமேஷ், துணைச் செயலாளா் அம்பிகாபதி, பொருளாளா் செந்தில்குமாா், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் ஜீவானந்தம், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் ஜி. ரவி, மாணவா் பெருமன்ற ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT