திருவாரூர்

மகளிா் வாழ்வாதார சேவை மையம் தொடக்கம்

மன்னாா்குடியை அடுத்த மூணாம்சேத்தியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் மகளிா் வாழ்வாதார சேவை மையம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

மன்னாா்குடியை அடுத்த மூணாம்சேத்தியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் மகளிா் வாழ்வாதார சேவை மையம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமை வகித்து, சேவை மையத்தை தொடங்கிவைத்தாா். மேலும், முதல்கட்டமாக 20 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நுண்தொழில் நிறுவன நிதியாக மொத்தம் ரூ.9.55 லட்சத்திற்கான காசோலைகளையும், உபகரணங்களையும் வழங்கினாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, 2 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் தொடங்க தலா ரூ.75 ஆயிரத்திற்கான வங்கி காசோலையை வழங்கினாா். நிகழ்ச்சியில், மன்னாா்குடி வட்டாட்சியா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, திட்ட செயல் அலுவலா் செல்வம் வரவேற்றாா். நிறைவாக, ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT