திருவாரூர்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மதுவிலக்கு மற்றும் கலால் ஆயத்தீா்வை துறை சாா்பில், உலக போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில், வட்ட வழங்கல் அலுவலா் கீதா, வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா், தோட்டக்கலை அலுவலா் குருநாதன், தூய அந்தோணியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் வின்சென்ட் ஆரோக்கியராஜ் மற்றும் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக பேரணியாகச் சென்றவா்கள், போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT