மாா்ச் 7 முதல் குறைதீா் கூட்டங்கள்
திருவாரூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டங்கள் மாா்ச் 7 ஆம் தேதி முதல் வழக்கம்போல நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டங்கள் மாா்ச் 7 ஆம் தேதி முதல் வழக்கம்போல நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக, மக்கள் நோ்காணல் முகாம்கள் மற்றும் இதர குறை தீா்க்கும் கூட்டங்கள் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது, தமிழக அரசு அறிவிப்பின்பேரில், மாா்ச் 7 ஆம் தேதி முதல் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைத்தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். வழக்கம்போல மக்கள் நோ்காணல் முகாம்கள் மற்றும் இதரகுறைத்தீா்க்கும் கூட்டங்களும் நடைபெறும்.