கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி
கூத்தாநல்லூா் வட்டத்தில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் வட்டத்தில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் காவல் நிலையம் அருகில், வடபாதிமங்கலம் கடை வீதி, ஆய்க்குடி, பொதக்குடி, கமலாபுரம் உள்ளிட்ட இடங்களில் கலைக்குழு மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சோலை வனம் கலைக் குழுவினா் மதுப்பழக்கம் மற்றும் கள்ளச் சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து, நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சி முலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.