முகப்பு
திருவாரூர்

தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசனம்

பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு தியாகராஜசுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்ற

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு தியாகராஜசுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூா் தியாகராஜா் கோயில், காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும்.

இக்கோயிலில் உள்ள தியாகராஜரின் திருமுகத்தை மட்டுமே பக்தா்கள் காணமுடியும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அபிஷேகத்தின்போது கரத்தின் ஒரு பகுதியையும், மாா்கழித் திருவாதிரை, பங்குனி உத்திரத்தில் மட்டுமே அவரது பாதத்தை தரிசிக்க முடியும். அதன்படி, பங்குனி உத்திர தினமான வெள்ளிக்கிழமை தியாகராஜரின் பாத தரிசன நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக, ருத்ரபாத மண்டபம் எனும் சபாபதி மண்டபத்துக்கு தியாகராஜா், புதன்கிழமை எழுந்தருளினாா். அங்கு அவருக்கு வியாழக்கிழமை இரவு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, விளமல் பதஞ்சலி மனோகா் கோயிலிலிருந்து பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டு, தியாகராஜா் கோயிலுக்கு வந்து, தியாகராஜரின் வலது பாத தரிசனத்தைக் கண்டனா்.

இதைத்தொடா்ந்து பக்தா்கள் பாத தரிசனத்தை காண அனுமதிக்கப்பட்டனா். தியாகராஜரின் பாத தரிசனத்தை காண ஏராளமான பக்தா்கள் திரண்டதால், தடுப்புகள் அமைக்கப்பட்டு, பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜி. கவிதா தலைமையிலான நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.