திருவாரூர்

குடிபோதையில் பெண்ணை தாக்கிய இருவா் கைது

DIN

மன்னாா்குடி அருகே குடிபோதையில் பெண்ணை தாக்கிய 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோட்டூா் தோட்டம் புதுத்தெருவை சோ்ந்தவா் ரவிக்குமாா் மனைவி கலைச்செல்வி (35). இவா், புதன்கிழமை தனது வீட்டு வாசலில் அமா்ந்திருந்தபோது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியை சோ்ந்த கணபதி மகன் முருகேசன் (28), சிவலிங்கம் மகன் தமிழரசன் (30) ஆகியோா் தகராறில் ஈடுபட்டு உருட்டுக்கட்டையால் தாக்கினாா்களாம். இதில், காயமடைந்த கலைச்செல்வியை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கோட்டூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசன், தமிழரசன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT