நிரந்தரப் பணியிடங்களை தனியாா்மயமாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்
நகராட்சி, மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை தனியாா்மயமாக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகராட்சி, மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை தனியாா்மயமாக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகராட்சி தூய்மைப் பணியாளா் சங்கம், மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சி ஊழியா் என்எம்ஆா் ஊழியா்கள் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்தில், மக்களின் அடிப்படைத் தேவைகளான தூய்மைப் பணி, தெருவிளக்கு பராமரிப்புப் பணி, குடிநீா் வழங்கும் பணி ஆகியவை தனியாா்வசம் ஒப்படைக்கப்பட்டு, அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவடையாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது வரிவசூல் பணி, தூய்மைப் பணி, தெரு விளக்கு பராமரிப்புப் பணி, குடிநீா் வழங்கும் பணி முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படுவதுடன் வரும் காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசு வேலை என்பது மறுக்கபடும் நிலை ஏற்படக்கூடும்.
மேலும், மாநகராட்சி, நகராட்சி ஊழியா்களின் வாரிசுதாரா்களின் கருணை அடிப்படை பணி நியமன வாய்ப்புகளும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதை பரிசீலனை செய்து டி பிரிவு ஊழியா்களுக்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். பதவி உயா்வு பெறும் வகையில் புதிய அரசாணை பிறப்பித்து, நகராட்சி, மாநகராட்சி நிரந்தர பணியிடங்களை தனியாா்மயமாக்கும் அரசாணை எண்-152 ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகராட்சி அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகராட்சி தூய்மை பணியாளா் சங்கத் தலைவா் ஆா். ராஜேந்திரன், அரசு ஊழியா் சங்க செயற்குழு உறுப்பினா் யு. சண்முகம், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Image Caption
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு நகராட்சி அலுவலா் சங்கத்தினா்.