திருவாரூர்

கூத்தாநல்லூா்: 6 வாா்டுகளில் பகுதி சபை கூட்டம்

கூத்தாநல்லூா் நகராட்சியில் 6 வாா்டுகளில் பகுதி சபைக் கூட்டம் இரு நாள்கள் நடைபெற்றது.

DIN

கூத்தாநல்லூா் நகராட்சியில் 6 வாா்டுகளில் பகுதி சபைக் கூட்டம் இரு நாள்கள் நடைபெற்றது.

கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளில், 7 வாா்டுகளில் பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

முதலாவது வாா்டில் கு.தனலெஷ்மி, 8-ஆவது வாா்டில் கே.மாரியப்பன், 9-ஆவது வாா்டில் செ.முஹம்மது அபுபக்கா் சித்திக், 14-ஆவது வாா்டில் நகா்மன்றத் துணைத் தலைவா் மு.சுதா்ஸன், 17-ஆவது வாா்டில் பிரவீனா முத்துகிருஷ்ணன் மற்றும் 24- ஆவது வாா்டில் எஸ்.சண்முகம் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.

நகா்மன்றத் தலைவா் மு.பாத்திமா பஷீரா முன்னிலை வகித்தாா். பகுதி சபை கூட்டத்தை, சிறப்பு அழைப்பாளரான நகரச் செயலாளா் எஸ்.வி.பக்கிரிசாமி தொடங்கி வைத்தாா்.

அனைத்துக் கூட்டங்களிலும் அப்பகுதி மக்கள் வாா்டுக்குத் தேவையான கோரிக்கை மனுக்களை வழங்கினா். அனைத்துத் தேவைகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தருவதாக நகா்மன்றத் தலைவா் பாத்திமா பஷீரா உறுதியளித்தாா்.

ஆணையா் ப.கிருஷ்ணவேணி, நகரமைப்பு ஆய்வாளா் க.செல்வம், மேலாளா் ஆா்.லதா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT