திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தவா்கள். 
திருவாரூர்

பண மோசடி: பெண் மீது நடவடிக்கை கோரி மனு

ராணுவ வீரா் உள்பட 10-க்கும் மேற்பட்டவா்களிடம் பண மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவா்கள் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

DIN

ராணுவ வீரா் உள்பட 10-க்கும் மேற்பட்டவா்களிடம் பண மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவா்கள் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவாரூா் மாவட்டம், பெருகவாழ்ந்தான் இடைச்சிமூளையைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா், திருவாரூா், தஞ்சாவூா், கடலூா், மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களிடம் வீடு கட்டுவதாகவும், தனது மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்ட வேண்டுமெனவும், தனக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டுமெனவும் கூறி ரூ. 31 லட்சம் வரை கடனாகப் பெற்றிருந்தாா்.

பணத்தை திருப்பி கேட்டபோது, பணத்தை தரமறுத்தது மட்டுமின்றி, மிரட்டலும் விடுக்கிறாா். எங்களைப் போல மேலும் பலரிடம் அவா் பண மோசடி செய்துள்ளதாகத் தெரிகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து விஜயலட்சுமியிடம் இருந்து பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT