திருவாரூர்

சி.பி.ஐ. சாலை மறியல்

கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

DIN

கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

கடந்த 100 ஆண்டு காலமாக அரசு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி குடியிருக்கும் மக்களை நீதிமன்ற உத்தரவைக் காட்டி, இயந்திரங்களைக் கொண்டு பழைமையான வீடுகளை இடித்துக் தள்ளுகின்றனா்.

அந்த நிலையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவா்களுக்கு மாற்று இடமும், பட்டாவும் வழங்கக் கோரியும் கூத்தாநல்லூா் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்,லெட்சுமாங்குடி பாலத்தருகே நகரச் செயலாளா் பி.முருகேசு தலைமையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விவசாய தொழிலாளா்கள் சங்க நகரச் செயலாளா் எம்.சிவதாஸ், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ராமதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சாலை மறியலால்,திருவாரூா் - மன்னாா்குடி, வடபாதிமங்கலம் - கொரடாச்சேரி பிரதான சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT