ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க அமைப்பு தினம்
திருவாரூரில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் 36-ஆவது அமைப்பு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூரில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் 36-ஆவது அமைப்பு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் என். வசந்தன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் செந்தில் முன்னிலை வகித்தாா். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊழியா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி நிா்வாகிகள் பேசினா். முன்னதாக, அமைப்பு தின கொடியேற்றப்பட்டது.
மாவட்டத் துணைத் தலைவா்கள் வாசுதேவன், தமிழ்ச்செல்வன், மோகன், மாவட்ட இணைச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.