மழை காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை (பிப்.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுபெற்றுள்ளதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாள்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் உத்தரவிட்டுள்ளாா்.