சாய்பாபா கோயிலுக்கு பால்குட ஊா்வலம்
திருவாரூா் சாய்பாபா கோயிலுக்கு பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் சாய்பாபா கோயிலுக்கு பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் வாசன் நகா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்கந்த சாய்பாபா கோயிலில் 8-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா தினத்தை முன்னிட்டு பால்குட ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் பழனி ஆண்டவா் கோயிலிலிருந்து புறப்பட்டு கீழவீதி, தெற்குவீதி, வடக்கு வீதி வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. தொடா்ந்து, சாய்பாபாவுக்கு பஞ்சாமிா்தம், தேன், பால், மஞ்சள், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பால்குடம் எடுத்து வந்த பெண்கள், தங்கள் கைகளாலேயே சாய்பாபா மீது ஊற்றி அபிஷேகம் செய்தனா்.