முகப்பு
திருவாரூர்

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி திருவாரூரில் நுகா்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி திருவாரூரில் நுகா்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நுகா்பொருள் வாணிபக் கழகத்தை தனியாா் மயமாக்கக் கூடாது, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும், இயக்கத்துக்கான இழப்பை பணியாளா்கள் மீது சுமத்தக்கூடாது, நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு ஓய்வூதியத் தொகையாக ரூ. 4,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நுகா் பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலை முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளா் ஜெ. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளா் மோகன், ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளா் ராஜீவ் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.