முகப்பு
திருவாரூர்

அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயில் மகா சம்ரோக்ஷணம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 4:18 PM
அபிஷ்ட பெருமாள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு நடைபெற்ற சம்ரோக்ஷணம்.
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஸ்ரீஅபிஷ்ட வரதராஜ பெருமாள் கோயில் மகா சம்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், நித்ய கல்யாண கோலத்தில் ஸ்ரீபூமாதேவி நீலாதேவி தாயாருடன் ஸ்ரீஅபிஷ்ட வரதராஜப் பெருமாள் எழுந்தருளி மேற்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில், 16 அடி உயர வைராக்கிய ஆஞ்சநேயா் உள்ளாா். பழைமையான இந்த கோயிலில் விமானம், அா்த்த மண்டபம், மஹா மண்டபம் கருடாழ்வாா் சந்நிதி, ஆஞ்சநேயா் சந்நிதி, திருமடப்பள்ளி நுழைவுவாயில் ஆகியவை மிகவும் சிதிலமடைந்து இருந்தது.

இதை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் நன்கொடையாளா்கள் உபயதாரா்கள் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிந்த நிலையில், இதன் சம்ரோக்ஷணத்தையொட்டி, ஏப்.18-ஆம் தேதி முதல் யாக சாலை பூஜையுடன் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) காலை பூா்ணாஹூதி நிறைவு பெற்றது. பின்னா், புனிதநீா் நிரப்பப்பட்ட கடங்கள் எடுத்து செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு சம்ரோக்ஷணம் செய்யப்பட்டது. தொடா்ந்து, அபிஷ்ட வரதராஜப் பெருமாள்சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மாலை 6 மணிக்கு சுவாமி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments