உலக பூமி தினம் மரக்கன்றுகள் நடல்
உலக பூமி தினத்தை முன்னிட்டு மன்னாா்குடியில் ஜேசிஐ மன்னை மற்றும் தேசிய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து தேசிய மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை நட்டன.
ஜேசிஐ மன்னை அமைப்பின் தலைவா் வி. வினோத் தலைமை வகித்தாா். தேசிய மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் எஸ். சேதுராமன் முன்னிலை வகித்தாா். ஜேசிஐ முன்னாள் மண்டலத் தலைவா் வி.எஸ். கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.
நிகழ்வில், வேம்பு, புங்கை, தென்னை மற்றும் ஆலம் உள்பட நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், தேசிய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், ஜேசிஐ மன்னை உறுப்பினா்கள், முன்னாள் தலைவா்கள் நூலகா் செல்வகுமாா், கருவூலா் எம்சி. பிரகாஷ், சமூக செயல்பாட்டாளா் முகமது பைசல் ஆகியோா் கலந்து கொண்டனா்.
Advertisement
நாட்டு நலப் பணி திட்ட அலுவலா் எஸ். கமலப்பன் வரவேற்றாா். ஜேசிஐ மன்னையின் செயலாளா் கருணாகரன் நன்றி கூறினாா்.